தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

18 December, 2011

கறுப்பு முடி, வெள்ளை முடியாக மாறுவது எதனால் ?

வயது அதிகமாக , அதிகமாக நமது முடி கறுப்பில் இருந்து
வெள்ளையாக மாறுவதற்கான காரணம் என்ன?


நம்முடைய ரோம செல்களில் இயற்கையாகவே சிறிதளவு ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் வேதி பொருள் சுரக்கிறது. வயது அதிகரிக்கும் போது சுரக்கப்படும் அந்த வேதி பொருலானது அதிகரிக்கும். ரோமத்திர்குள்ளேயே ஏற்படும் இந்த மாற்றங்கள் முடியை சாம்பல் நிறத்திற்கு மாற்றி அதன் பிறகு வெள்ளையாக்கி விடுகிறது.

ரோமத்திற்கு இயற்கையாகவே நிற மூட்டுவது மெலனின் என்னும்வேதி பொருள். ரோமம், கண்கல், தோல் இவற்றின் நிறத்தினை தீர்மானிப்பது இந்த மெலனின் தான். மெலனின் சுரப்பதை ஹைட்ரஜன் பெராக்சைடு தடை செய்துவிடுவதான் பிரச்சனையின் மூல வேர் ஆகும்
.



மனிதர்களின் ரோமகால்களின் மாதிரிகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் ரோமங்களின் சுரக்கும் ஹைட்ரஜன் பெராக்சை தண்ணீராகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் சிதைவடைய செய்யும் பணியை என்சைம்கள் செய்கின்றன.
என்சைம்கள் சுரப்பது குறைவடையும் போது ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடைவதும் குறைந்து போகிறது. ஹைட்ரஜன் பெராக்சைடு அதிகரிப்பதால் என்சைம் உற்பத்துயாவதும் நின்று போய் விடுகிறது. மயிர் கால்களில் மெலனின் சுரப்பத்திற்கு இந்த என்சைம்தான் காரணம்.


நன்றி !
தினமலர்-(சிறுவர்மலர்)

இரயில் பயணமா? பஸ் பயணமா?

இரயில் பயணம் செய்தால் களைப்பு ஏற்படுவதில்லை, பஸ் பயணம் செய்தால் களைப்பு
ஏற்படுகிறதே ஏன்?



பஸ் ஓடும் போது அதன் இஞ்ஜின் அதிர்வுகளும் , சாலையில் உள்ள மேடு

பள்ளங்களில் ஏறி இறங்கும் போது ஏற்படும் நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தி

களைப்பை அதிகரிக்கின்றன. பஸ்ஸின் வேகம் எல்லா நேரத்திலும் சீராக இருப்பது

இல்லை. வளைவுகளில் திருப்புவதாலும் நம் உடல் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும்

தள்ளப்படுகிறது . தொடர்ந்து ஒரே நிலையில் இருக்க முடியாமல் போவதால் நம்

உடல் களப்படைகிறது.




இரயில் பயணம் என்றால் , அதன் இஞ்ஜின் அதிர்வதில்லை. தண்டாவாலம் ஒரே

சீராக உள்ளதால் அதில் மேடு, பள்ளங்கள் இல்லை. வண்டியின் வேகம் திடீர் என

அதிகரித்தும் , திடீர் என குறைவதும் இல்லை. வலவலப்பான தண்டாவாலத்தில் ரயில்

பெட்டிகள் எகிறி குதிக்காமல் செல்வதால் அதிக அதிர்வோ, அதிகமான ஓசையோ

ஏற்படுவதில்லை.



இதன் காரணமாக நமக்கு இரயில் பயணத்தின் போது அதிக களைப்பு

ஏற்படுவதில்லை.




நன்றி!
தினமலர்-(சிறுவர் மலர்)

29 November, 2011

ATM இரஷிதில் உள்ள கோடுகள் (ATM Transaction code)





நாம் அன்றாடும் பயன்படுத்தும் ஒரு மிக்கியமான விஷயம் பணம்.

அப்பணத்தை பாதுகாக்க நாம் வங்கியில் சேமிக்கிறோம்.

நமக்கு தேவையான சமயத்திற்கு ஏற்ப அதை எடுத்து செலவு செய்ய வங்கி சார்பில் அளிக்க பட்ட ஒரு எலட்ரானிக் அட்டை மூலம் பணத்தை பெறுகிறோம்.

இவ்வாறு எடுக்க படும் போது ஒவ்வொரு முறையும் நமக்குமீதமுள்ள தொகையை இரஷிது மூலம் பெற்றுகொள்ளுகிறோம்.


சில சமயத்தில் தேவைபடும் சிறு குறிப்புகளை அதாவது, ஒரு மாதத்தில் செய்த வரவு , செலவுகலை ATM மிசினில் பெற்று கொள்ளலாம்.அதில் வரும் வரி விளக்கங்கள் நமக்கு புரியாது.

அதில் இரண்டு,மூன்று வார்த்தை மட்டுமே அச்சிடபட்டு இருக்கும் .அதற்கான விபரங்கள் புரியாது.

அதற்கான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து உணர்ந்து பயன் பெறுங்கள்.

ATM ---என்ற வார்த்தையின் உண்மையான சரியான விளக்கம்

[Automatic Teller machine]

ஆட்டொமெடிக் டெல்லர் மிசின்

[தானியங்கி பணம் பட்டுவாட இயந்திரம்]



AFT---ATM funds transfer

ATW---ATM cash withdrawal

BCS---mgr's cheque issued

CDR---cheque returned in clearing

CHD---cheque deposit

CHQ---cash paid in clearing

CSD---cash deposit

CSW---cash withdrawal

DDC---DD issued

FTC---fund transfer credit

FTD---fund transfer debit

MSC---misc..credit

MSD---misc,,debit

SCD---Service charge debit

SCW---cheque paid

SLC----standing instruction credit

SID---standing instruction debit

SWC---sweep in credit

SWD---sweep in debit

TFT---FD opened

NWD---Cash withdrawal at other bank ATM



தங்களின் மேலான கருத்தையும்,திரட்டிகளில் ஓட்டையும் இட்டு அனைவருக்கும் பயன்பெற செய்வீர்.

13 November, 2011

ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்-மழைதூரல்


ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்


இந்த பதிவு நான், பார்த்த, படித்த ,தெரிந்த விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவே.இதனால் ஏற்படும் இழப்பிற்கு நானே,இத்தளமொ எந்தவகையிலும் பொறுப்பாகாது. தங்கள் சொந்த அறிவின் பயனால் முயர்ச்சிக்கவும் .இது சாம்சங் கேலக்ஸி i7500 மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்க பட்டது. பிற ஆண்ராய்டு போனிலும் முயற்சித்து பார்க்கவும்.

25 October, 2011

தீபாவளிக்கு ஷாப்பிங்கு போரிங்களா...... ! இதை படிங்க முதல.........






தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஒரே கொண்டாட்டம்தான். அதிலையும் குழந்தைகளாய் இருக்கும் போதுஅதுவும்,பள்ளி பருவத்தில் தீபாவளி என்றால் கேட்கவே வேண்டாம் பெரிய கொண்டாட்டம்தான்.
               இந்த ஒரு பண்டிகைக்கு மட்டுமே நம் நாட்டில் பல இலட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகுதென்ரால் அது மிகையில்லை.
  அப்படி நாம் பாடுபட்டு சேர்த்த,உழைத்த பணத்தை கொண்டு துணிமணிகள்,நகைகள்,பட்டாசு ,டிவி,எலட்ரிக்கள்,எலட்ரானிக்கள் குட்ஸ் போன்ற அதி முக்கியமாக வாங்குகின்றோம்.
அப்படி செலவு செய்யும் பணத்தை துண்டுவிலாமல் சரியாக பயன் படுத்தினாலே ஒரு பெரிய வேலை முடிந்த மாதிரிதான்.


சரி இந்த பதிவு எதற்கு என்றால் எப்படி தீபாவளி நேரத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.



  1. முதலில் வேலை உங்கள் வசதிக்கு தக்கபடியான சரியான ஒரு முன் பட்ஜெட்டை ரெடி பண்ணுங்கள் .
  2. யார் யாருக்கு என்னனென்ன டிசைன்,மாடல்,கடை,விலை என்பதை வீட்டில் இருந்து கிளம்பும் முன்னே முடிவெடுத்து கொள்ளுங்கள்.
  3. நாம் பொருள் வாங்க நினைக்கும்,விரும்பும் கடைக்கு செல்ல வேண்டிய பாதை,ரூட்,பார்க்கிங் ஏரியா ஆகியவற்றை உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியவைத்து பின் ஷாப்பிங் கிளம்பினால் தேவையேற்ற் அலைச்சல்களை அதிகம் குறைக்கலாம்.
  4. முக்கியமாக நமது வீட்டு பெண்கள்,குழந்தைகள் நகைகளை அதிகம் அணியாமல் ஷாப்பிங் செல்வது ரொம்ப நல்லது.
  5. பெரிய ஷாப்பிங் மால் அல்லது பெரிய ஜவுளிகடைக்கு போகும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ,குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரும்மாறு ஒரு பிளானை ரெடி செய்து விட்டு செல்லுங்கள் .இதனால் ஒருவரை ஒருவர் பின்பற்ற தவறினாலும் குறித்த இடத்திற்கு வந்துவிடுமாறு சொல்லிவிடலாம்.
  6. முடிந்த வரையில் பணத்தை கையிருப்பாகவே வைத்து கொள்ளுங்கள்.பந்தாவாக இருக்கும் என்று நினைத்து ATMகார்டு,கிரெடிட் கார்டு மூலம் பணம்செலுத்த வேண்டாம், இது மாதிரி பண்டிகை காலங்களில் தவிருங்கள்.
  7. கார்டு மூலம் பணம் செலுத்தும் போது வியாபார கூட்டத்தில் கார்டு விபரங்கள் உங்களுக்கு தெரியாமல் அபகரிக்க வாய்ப்புள்ளது.
  8. அல்லது உங்கள் கணக்கில் ஒரே பில்லுக்கு இரண்டு,மூன்று முறைகூட பணம் எடுக்க பட்டு இருக்கும்.
  9. வங்கியே பணத்தை எடுத்து விட்டு பொருள்வாங்கியதாக கணக்கில் கழிக்க பட்டு இருக்கும்.பின் போராடி வரவு வைக்க வேண்டிய நிலை வரும்.
  10. முடிந்த வரை உங்கள் வங்கி இருக்கும் இடத்தில் வங்கிசார்பு ATM களை பயன்படுத்துகள்.பிற வங்கி ATM களை பயன்படுத்துவதை முடிந்த வரை தவிருங்கள்
      1.  (ஏன் என்பதற்கான காரணம் அடுத்த பதிவில்)
    .அவசிய அவசர தேவைக்கு மட்டும் பிற ATMமை பயன்படுத்தவும்.
  11. பணத்தை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் பகிர்ந்து(பணத்தை பகுதியாக பிரித்து) கொள்ளுங்கள் .
  12. கைகுழந்தைக்கு தேவையற்ற வீண் ஆடம்பரமான துணிமணிகளை  வாங்காதீர்கள்.இதனால் எந்த பயனும் இல்லை.சில நாட்களிலே சைஸ் பொருந்தாவண்ணம் ஆகும்.
  13. ஷாப்பிங் போகும் போது கைகுழந்தைக்கு புசு புசு புசு போன்ற கவுனை,நைலான் துணிகளை தவிர்க்கவும்.காட்டன் துணிகளை அணிவிக்கலாம்.
  14. குழந்தைகளுக்கு தேவையற்ற செருப்பு,ஷு,தொப்பி,வாச்சு ,கண் கண்ணாடி போன்றவற்றை அணியாமல் இருங்கள்.மற்றும் டஜன் கணக்கில் டிரஸ்க்கு மேச்ச வாங்கினேன் என்று குப்பைகளை சுமக்காதீர்கள்.இது தெண்ட செலவு ஆகும்.என்ன குழந்தை இததெல்லாம் போட்டுகிட்டு நடந்துபோகவ போது....
  15. குழந்தைக்கு தேவையான பால்,தண்ணிர்,நாப்கின் தவறாமல் கொண்டு செல்லுங்கள்.
  16. நன்கு பெரிய கடையோ அல்லது அறிமுகமான கடைகளிலோ பொருட்களை வாங்குங்கள்.தெரியாத கடையில் பழைய சரக்கை விற்று தள்ளி விடும் வாய்ப்பு அதிகம்.
  17. கணவன் மார்களே எவ்வளவு பட்ஜெட் என்று முடிவு செய்த பின் கூடுதலாக ஒரு 20% பணம் வைத்துகொள்ளுவது நல்லது.இதை ஒரு போதும் வீட்டில் யாரிடமும் கூராமல் இருப்பது மிக நல்லது.சில நேரத்தில் உதவும்.
ஷாப்பிங் முடிந்த பின் தனியாக ஒரு வாடகை ஆம்னி அல்லது பிற கார்களையோ பயன் வீட்டிற்கு வந்து சேருங்கள்.காசை மிச்சம் பண்ணும் பேர்வழினு பஸ்லயோ,ஆட்டாவிலோ வருவது இட நெருக்கடியும்,மன நிம்மதியையும்,பொருட்களையும் தவற விடும் வாய்ப்பாக அமையும்.

    அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள் !

    17 October, 2011

    தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...

    05 September, 2011

    ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்


    ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்
                  

    உலகில் வளர்ந்து வரும் மொபைல் மார்கெட்டிங் துறையில் கூகுள் ஆண்ட்ராய்டு o.s தனக்கென ஒரு இடத்தையே உருவாக்கி கொண்டு(உள்ளது)வருகிறது.
    இதன் எளிமையான மார்கெட்டிங் தந்திரம் அனைத்து பிற மொபைல் மார்கெட்டினை வீழ்த்தி முன்னேறி வருகிறது.
    அதாவது , மைக்ரோ சாப்டின் விண்டோஸ் மொபைல்,நோக்கியாவின் சிம்பியான் மொபைல்,பிளாக் பெர்ரி மொபைல்,ரிம் மொபைல்,ஆப்பிளின் ஐபோன் மற்றும் வெப் (ஓஸ்) ஆகியவை.

    14 August, 2011

    ஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் தளங்களை பார்க்க-மழைதூரல்


    கூகிள் ஆன்ட்ராய்டு மொபைல் தனது பயனாளருக்கு, பல அரிய வகை சாப்ட்வேர்களை இலவசமாக தனது வாடிக்கையாளருக்கு அள்ளி வழங்குகிறது.கூகுள் தனது இலவச கட்டமைப்பு தொகுப்பை (o.s) ஒவ்வெரு படி நிலையிலும் மேம்படுத்தும் போதும் பல எளிய பயன் தொகுப்புகளையும் சேர்த்து வெளியிடுகிறது.பல்வேறு வசதியினை கொட்டி வழங்கினாலும் தமிழ்மொழியில் உள்ள இணையதளங்களை காணுவதற்கான வசதியினை கொடுப்பது இல்லை.இது பல பயனாளருக்கு வருத்ததை தருவதாக உள்ளது.
    ஆன்ட்ராய்டு மொபைலில் அதனுடன் இருக்கும் ஆன்ட்ராய்டு மார்கெட்டில்

    13 August, 2011

    Airtel GPRS 98 (2GB)pack இனி இல்லை


    Airtel GPRS 98 (2GB)pack இனி இல்லை

    ஏர்டெல் வாடிக்கையாளருக்கு ஒரு வருத்தமான செய்தி, ஏர்டெல் மூலம் மொபைல் இன்டர்னெட் பெற்று அதை பல வாராக பயன் படுத்தி வந்தோம்.இதற்கு நாம் மாதம் ரூபாய் 98 ரீசார்ஜ் செய்தால் அதில் (2ஜிபி-30நாள்) கொள்ளலவு பயன் படுத்தலாம் .
     இதில் நாம் பிரவுசிங்,சாங் டவுன்லோடு,மொபைல் மூலம் லேப்டாப் இனைத்து என போதுமான பலன்களை அனுபவிதோம்.
    இதை பலர் சரியாக பயன் படுத்தி ஒரே மாதத்தில்  இரண்டு,மூன்று முறைகூட ரீசார்ஜ் செய்தனர்.

    05 August, 2011

    கைவிலங்கை கழட்டுவது எப்படி?




    வெளிநாடுகளில் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களை நமூர் போல் கைது நடவடிக்கை செய்வார்கள்.
    அதில் இருந்தும் தப்பும் ஜெகதலா கிலாடிகளும் இருக்கதான் செய்கிறார்கள். சூரப்புலின் தந்திரங்கள் இன்று நமக்காக , இந்த வீடியொவை பாருங்கள்.






    02 August, 2011

    நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !! !



    நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !! !



    நீங்கள் AIRTEL வாடிக்கையாலராக இருந்து பல இன்னல்களை சந்தித்து

     இருப்பீர்கள் .அதில் இருந்து விடுபட சில யோசனைகள்,வழிமுறைகள்

     உங்களுக்காக தற்காலியமாக . . . . . . . .

     உங்கள்மொபைல்கணக்கில் பணம் எடுக்கிறார்களா அல்லது

    உங்களுக்கு அதை தெரிந்து சர்வீசை நீக்க வழிமுறை;
    (முதலில் போன பணம்போனது தான் ! )


     வழிமுறை 1

     உங்கள் மொபைலிருந்து *121# என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள் வரும்

     MENUவில் ஐந்தாவதாக உள்ள STOP SERVICE என்பதை உறுதி செய்து, கீல்

     இருக்கும் reply பகுதில் 5 யிட்டு பதில் அனுப்பவும் .

     பின்பு ,உங்கள் மொபைலில்வழங்கப்பட்டுள்ள சர்வீஸ்கள் காட்டப்படும் .

     அதில் தேவைஇல்லாத சர்வீஸ்சின் வரிசை எண்ணை குறித்து reply

     செய்தால், உறுதிபடுதும் menu வந்து கன்பார்ம்reply செய்தால் சர்வீஸ்

     நீக்கப்படும்.

    29 May, 2011

    சாம்சங் ஏஸ் s5830


     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    சாம்சங் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட
     
    சூப்பர் ஆன்ட்ராய்டு மொபைல் தான் ஏஸ் s5830
     
    ஆகும் .
    இந்த மொபைல் கடந்த ஏப்ரல் மாதம்தான்
     
    அறிமுகம் படுத்தியது.
    இதன் தனி சிறப்பு கூகுள் நிறுவனத்தின்
    o.s ஆன ஆன்ட்ராய்டு 2.2  நிறுவ பட்டுஉள்ளது.

    28 May, 2011

    மல்லாக்க படுக்க வச்சு..........


    சில பேர பார்திங்கன, காலைல குளிச்சிட்டு,பவுடர்ல முகத்தை
    அப்பிகிட்டு ,எண்ணெயில்ல  தலைல பட்டும்,படாம தடவிகிட்டு
    டெரஸ் மட்டும் நீய்ட்ட போட்டுகிட்டு  பைக்-க ஆபீஸ்க்கு
    காலையில போவுரத்துக்கு முன்னே, மூஞ்சிய அஸ்டகோணல
    வச்சிக்கிட்டு எடுப்பாங்க.

    15 April, 2011

    C.D யில் பதியும்போது ஏற்படும் பிரச்சினை

     கீழே உள்ள தொடர் இன்னொரு வலைப்பூவில் சுட்டது .மன்னிக்கவும் நாலு பேறுக்கு நல்லது ன அது தப்புஇல்ல !


    அன்றாடம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில், சிடிக்களைக் கையாளும் பிரச்சினையும் ஒன்று. இன்றைய சூழ்நிலையில் சிடிக்களைப் பயன்படுத்துவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.



    பிளாஷ் டிரைவ் பயன்பாடு, பைல்களைக் காப்பி செய்து எடுத்துபோவதை மிக எளிதாக மாற்றியுள்ளது. இருப்பினும் ஓரிரு பைல்களை எழுதி, எழுதப்பட்ட மீடியாவினை யாருக்கேனும் தந்து விட்டு வர வேண்டும் என்றால் அதற்கு சிடிதான் சரியான வழி. எனவே சிடியைக் கையாள்வதில் உள்ள பிரச்சினைகளை இங்கு காணலாம்

    13 April, 2011

    ஒரு ஜோக்கு

    திருவிழா கூட்டத்தில் மைக்  இவ்வாறு ஒலித்தது
    3 வயது பிள்ளை எங்களிடம் வந்து அழுதுக்கொண்டு
    வந்துள்ளது ,அதன் அப்பா , அம்மாவை காணவில்லையாம் !
    அவர்கள் எங்கு இருந்தாலும் உடனே  விழா மேடைக்கு
    வருமாறு கேட்டுக்கொள்ள  படுகிறது.
    குழந்தையின் அப்பா பெயர் _சூப்பியமனியம்-மாம்
     அம்மாவின் பெயர்  _மறாகத்த லக்ஸ்சூமீ   -ஆம் .

    பொன்மொழி

    ''நவீன அறிவியல் முறைகளைத் தவிர வேறு
    எதையும் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
    காரண அறிவுற்கு ஒவ்வாதை நீங்கள்
    கவனிக்க மாட்டீர்கள்.எனவே ஆன்மிகத்தையும்
    காரண அறிவு எனும் துணியால் போர்த்த
    வேண்டியுள்ளது.ஏன் எனில் உங்களிடம் காரண
    அறிவுதான் அதிக அளவில் இருக்கிறது''.
                                                                                       _சத்குரு

    12 April, 2011

    பொன்மொழி

    ''உங்களுக்குள் என்ன நடக்க வெண்டுமென்று 
    உங்களைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்கக் 
    கூடாது.உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கலாம் .   
    அது சாத்தியமானதே .ஒவ்வொரு மனிதரும் இப்படி
    வாழமுடியும்.இப்படிதான் வாழவேண்டும் ''
                                                                                          -சத்குரு

    06 April, 2011

    பழமொழி

    
    சொல்வதை எல்லாம் நம்பாதே !
    நம்பியதை எல்லாம் சொல்லாதே
    !
    

    o
    Related Posts Plugin for WordPress, Blogger...